மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் ராஜினாமா..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும் தோல்வி அடைந்த நிலையில், கட்சியில் இருந்து பலர் வெளியேறிய நிலையில், தற்போது, திருச்சி முருகானந்தமும் வெளியேறி உள்ளார். கட்சி தலைமை மீது குற்றம் சாட்டி 6 பக்க கடிதம் எழுதி உள்ளார்.

தேர்தல் ‘தோல்விக்கு பின் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை; மாறுவார் என்ற நம்பிக்கையுமில்லை’ எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தது ராஜினாமா செய்தனர்.

துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். 

சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய கமல் கூட வெற்றி பெற முடியாத நிலையில், மொத்த கூடாரமும் காலியாகி வருகிறது.

இந்த நிலையில், மநீம கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

கட்சித்தலைவரான கமல்மீது குற்றம் சாட்டி 6 பக்கம் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே