மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அன்றும் இயங்கும்..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாளை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், தேர்தல் முடிவுகளை ஒட்டி தொண்டர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதாலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென அரசு அறிவித்தது.

அதன் படி, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது.

வாக்கு எண்ணிக்கைக்காக செல்லும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முழு ஊரடங்கின் போதும் மெட்ரோ ரயில்கள் இயங்குமென மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 1 மணி நேரத்துக்கும் ஒரு முறையும் சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே