அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி
இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கொரோனா தடுப்பு பெரும் சவால்.
கொரோனா தடுப்பு வாழ்வா , சாவா என்ற போராட்டமாக உள்ளது.
சில முடிவுகள் ஏழை மக்களை பாதித்துள்ளது என்பதை உணர்கிறேன்.
கொரோனாவை தடுக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை. கொரோனாவை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
கடுமையான முடிவுகளுக்காக சிலர் என் மீது கோபமாக இருக்கலாம்.
கொரோனா எதிர்ப்பு போரில் கடுமையான முடிவுகள் அவசியமான ஒன்று.
விதியை மீறி வெளியே வருபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர்.
விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் சிலர் கரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.
மேலும் , இது வாழ்வா, சாவா என்ற போராட்டமாக உள்ளதாக தெரிவித்தார்.