இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்பட 979 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன.

அவா்களில் 86 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா்.

920 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என மத்தி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே