மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்தது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,619- ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 151 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,822-ஆக அதிகரித்துள்ளது.