கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சென்னையில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் என்றும், திங்கள் அல்லது செவ்வாய் முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.