இந்தியாவில் 2 லட்சத்துகு கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு..!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில், காலை 10 மணி நிலவரப்படி, புதிதாக 1,96,427 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,69,48,874-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 25,86,782 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 3,511 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,07,231 -ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 3,26,850 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,40,54,861-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை எட்டியது. அதன்பின்னர் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்திய அளவில் பாதிப்பு குறைந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே