பனாஜி: கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
கோவாவின் முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கர். அவரது மகனான உத்பல் பாரிக்கர், பாஜகவில் உள்ளார். இந் நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று எனக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. லேசான தொற்று தான் ஏற்பட்டு உள்ளது. எனவே வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொள்வேன் என கூறினார்.
ஆனால் மருத்துவர்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து உத்பல், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.