கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது மற்றும் புதுமையான சிந்தனைகளை முன்வைத்தது குறித்த சிந்தனையாளர்களின் பட்டியலை, பிரிட்டன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிச., மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறிய உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதுகுறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவிலிருந்து கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதல் இடம் பிடித்திருக்கிறார். 

இரண்டாவது இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்குக் கிடைத்துள்ளது.

‘இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளியை சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தீவிரப்படுத்தினார்.

மேலும், ‘பிரேக் தி செயின், வைரஸ் டிரேசிங் முறை’ உள்ளிட்ட புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இதனால், கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

கொரோனா மட்டுமல்லாது 2018ம் ஆண்டு கேரளாவில் பரவிய நிபா வைரசைக் கட்டுப்படுத்துவதிலும் ஷைலஜா மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்’ என, பிராஸ்பெக்ட் இதழ் குறிப்பிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே