கண்ணையா மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீடு பெரம்பூரில் உள்ளது. அந்த வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பிரகாஷ் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கண்ணையாவின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே