கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிக பாதிப்புள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதன்படி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ராஜஸ்தான், அசாம், ஹரியானா மாநில முதல்வர்களுடன், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த காணொலி காட்சி ஆலோசனையில் பங்கேற்கிறார்.
உடன், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் பங்கேற்கின்றனர்.