தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,14,520 ல் இருந்து 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 7 நாளாக புதிய பாதிப்பு 1,000திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,058 (35%) ஆக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2,07,297 (65%) ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் எப்போது இல்லாத அளவு இன்று 119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கோவையில் தலா 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,397ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 1.684% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,61,459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 81.61% ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 67,275 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 34,99,300 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல, இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,75,596 ஆக உள்ளது.