#BREAKING :தமிழ்நாட்டில் (13.08.2020) இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா… 5,146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,14,520 ல் இருந்து 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 7 நாளாக புதிய பாதிப்பு 1,000திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,058 (35%) ஆக அதிகரித்துள்ளது.

பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2,07,297 (65%) ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் எப்போது இல்லாத அளவு இன்று 119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கோவையில் தலா 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,397ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 1.684% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,61,459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 81.61% ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 67,275 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 34,99,300 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல, இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,75,596 ஆக உள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே