எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – நடிகர் பார்த்திபன் பேச்சு..!!

நடிகர்கள் அரசியலுக்குள் வந்து சிறப்பான ஆட்சியை கொடுத்து உள்ளனர் என்றும், தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருதை இயக்குநர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை இயக்கியதற்காக பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

விருதுபெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரப்போகும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என மக்கள் குழம்பி போய் உள்ளனர. இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஏற்கனவே நடிகர்களாக இருந்து அரியலுக்குள் வந்தவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்து உள்ளனர்.

அதேபோல் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை அவசியம் இல்லை.

அரசியல் ஆர்வம் எனக்கு உள்ளது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். இளைஞர்கள் அனைவருமே அரசியலுக்கு வரவேண்டும் என்பது விருப்பம்” எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே