மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், தனது கொரோனா அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.
கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.