இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும்? சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் திருமணமான நடிகை

இந்த பூமியில் எப்படி இவ்வளவு நல்லவர் ஒருவர் இருக்க முடியும்? என ஆச்சரியத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் திருமணமான நடிகை ஒருவர், சிவகார்த்திகேயன் குறித்து பதிவு செய்துள்ளார். அந்த நடிகை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்த நிரஞ்சனா தான்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா என்பவர் சமீபத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. தேசிய பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் நிரஞ்சனா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி – நிரஞ்சனா திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிகளுக்கு ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தயாரிப்பாளர் ஒரு கார் பரிசளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நிரஞ்சனா மற்றும் தேசிங்கு பெரியசாமியை நேரில் வந்து சந்தித்து உள்ளார். அப்போது நீண்ட நேரம் சிவகார்த்திகேயனுடன் உரையாடியதாகவும், இந்த பூமியில் இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும், சிவகார்த்திகேயனுடன் உடனான அழகான நீண்ட உரையாடல் தனக்கு என்றும் நினைவில் இருக்கும் என்றும் நிரஞ்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன், தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனா மற்றும் கனி ஆகியோர் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே