ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் – கமல்ஹாசன் அறிவிப்பு..!!

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார்.

இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், நமது நாட்டில் மட்டுமே பெண்களை பல வழியில் போற்றுகிறோம். 

அவர்களுக்கு என தனித்திறமை உள்ளதை அனைவருமே உணர்ந்துள்ளோம்.

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதனையாளர்கள் உள்ளனர். அதை யாரும் மறுக்கமுடியாது.

அதுமட்டுமல்ல, வீட்டில் பல வேலைகளை முன்னின்று செய்பவர்களும் தாய்மார்கள்தான்.

எனவே, மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள நேர்மையான ஆண்கள், தாயை வழிபடுவர்கள் இதைப்பற்றி யோசித்து வருகின்றனர்.

அதை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் என்றார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் இந்த அதிரடி அறிவிப்பால், மற்ற கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே