ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!

இந்த ஆண்டு ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியாவிலிருந்து உறுதியான தகவல் இல்லாத நிலையில், ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்களின் முன் பணத்தைத் திருப்பித் தர இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தலமான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் ஹஜ் கமிட்டி அஸோஸிஷன் தலைவர் அபூபக்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஆயுத்த பணிகள் தொடங்குவதற்கு இன்னும் 2, 3 வாரங்களே உள்ள நிலையில் , சவுதி அரேபியா அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

இதனால் , பயண ஏற்பாடுகளை தொடங்க முடியாத சூழல் நிலவுவதால் , 2020ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் , ஹஜ் பயணம் குறித்து பலர் எங்களிடம் விசாரித்து வருகின்றனர்.

தங்கள் கவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர். 

எனவே ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்ய விரும்பினால் , எந்த பிடித்தமும் இல்லாமல் , செலுத்திய முழு தொகையும் வழங்கப்படும் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்காக ஹஜ் கமிட்டியின் இணையதள பக்கத்தில் பயண ரத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும்; வங்கி பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே