நாட்டில் ஆகஸ்ட் மாதம் ரூ.86,449 கோடி ஜி.எஸ்.டி வசூல் – நிதி அமைச்சகம் தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் ரூ. 86,449 கோடி வசூலாகியிருப்பதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தைக் (ரூ. 87,422 கோடி) காட்டிலும் இது ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 98,202 கோடி வசூலாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய அரசின் ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ. 15,906 கோடி, மாநில அரசின் ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 21,064 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) 42,264 கோடி, செஸ் வரி ரூ. 7,215 கோடி ஆகியவை அடங்கும்.

ஐஜிஎஸ்டியிடமிருந்து சிஜிஎஸ்டி-க்கு ரூ. 18,216 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு ரூ. 14,650 கோடியும் செலுத்தப்பட்டுவிட்டது.

இதன்மூலம், ஆகஸ்ட் மாதத்தில் சிஜிஎஸ்டி-க்கு மொத்தம் ரூ. 34,122 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு மொத்தம் ரூ. 35,714 கோடியும் வசூலாகியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே