உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும் – பாஜ., அண்ணாமலை கோரிக்கை..!!

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு ஏற்படுத்தும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

நீட் முடிவுகள் தற்போது வெளி வந்து, மருத்துவ படிப்பு சேர்க்கை கவுன்சிலிங் துவங்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

இந்நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநரால் அனுமதி அளிக்கப்படாமல் இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை “கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன்.

மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே