திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி..!!

திருமலை – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்குப்பிறகு நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமலை – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் டோக்கன் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நாள் தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது.

திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் காலை 5 மணி முதல், இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே