முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று நெஞ்சுவலி வலி ஏற்படவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது.

மன்மோகன் சுங்குக்கு கொரோனா தொற்று ஏதும் உள்ளதா என்றும் பரிசோதிக்கப்பட்டது. 

நெகட்டிவ் என்று முடிவு வந்ததைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதயநோய் சிறப்பு ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங், தனி அறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மன்மோகன் சிங் வீடு திரும்பியுள்ளார்.

87 வயதான மன்மோகன் சிங்குக்கு இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அவருக்கு இரண்டு முறை பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே