கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 68.
அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று இரவுதான் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் காலமானார்.
ரஞ்சித் சின்ஹா பல்வேறு மூத்த பதவிகளை வகித்தார்.
ரஞ்சித் சிங் 1974-ல் ஐபிஎஸ் அதிகாரியாகவும், சிபிஐ இயக்குநராக வருவதற்கு முன்பு பல முக்கியமான பதவிகளை வகித்திருந்தார்.
அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) இயக்குநராக இருந்தார். 22 நவம்பர் 2012 அன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தார். மேலும், பாட்னா மற்றும் டெல்லி சிபிஐ ஆகியவற்றில் மூத்த பதவிகளில் பணியாற்றினார்.