அமைச்சர் சி வி சண்முகத்துக்குக் கொரோனா தொற்று உறுதி..!!

தமிழக அமைச்சா் சி.வி.சண்முகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோந்த இவா், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோதலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டாா்.

விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டாா். அன்று பிற்பகலில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டாா். இதற்கான முடிவு வியாழக்கிழமை வெளியானதில் அமைச்சருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே