ஊனம் கொண்ட நாயை கவனித்துக் கொள்ள ரோபோ தயாரிப்பாளரான மிலிந்த் ராஜ் ஒரு புதிய ரோபோவை வடிவமைத்துக் கொடுத்தார்.
இப்போது அந்த ரோபோவை ஒரு உயிருள்ள எஜமானைப் போல அந்த நாய் நன்றி பாராட்டி வருகிறது.
டாக்டர் அப்துல்கலாமிடம் பணியாற்றிய டிரோன் மனிதர் மிலிந்த் ராஜ், கொரோனா ஊரடங்கின் போது, ஜோஜோ என்ற இந்த ஊனமுற்ற நாயை லக்னோவில் கண்டெடுத்தார்.
சிகிச்சையும் அளித்து நாய்க்கு உணவளிக்க ஒரு ரோபோ கையைக் கண்டுபிடித்தார்.
இந்த ரோபோவிடம் தான் நாய் நட்பு பாராட்டி வருகிறது.