நாளை மறுநாள் மத்திய அரசுடன் ஏழாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்த உள்ள விவசாயிகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி டெல்லியை நோக்கி பேரணிகள் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆறாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்தக் கட்டப் பேச்சுகளின் போது சுமுகமான முடிவு எட்டப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியை அடுத்த சிங்கூ எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே