தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் இன்று மாலை 5 மணியளவில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் சந்திப்பில் முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களைத் தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக ஆளுநரை முதல்வர் சந்தித்து பேசி வருகிறார்.