வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 06-ஆம் அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே