BREAKING : இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது – கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களது தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே