முதல்வர் பழனிசாமி குறித்த விமரிசனத்துக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கூறியுள்ளார்.

எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி கண் கலங்கியதால், மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். எனவே, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்துப் பேசியதற்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

இடப் பொருத்தமற்ற, சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதிலிருந்து மன்னிப்புக் கோருகிறேன். 

எனது பேச்சால் உள்ளபடியே முதல்வர் பழனிசாமி காயப்பட்டிருந்தால் மனம் திறந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஆ. ராசா கூறியுள்ளார்.

தனது தாயார் குறித்து ஆ.ராசா விமரிசித்தார் என்று நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நா தழுதழுத்து கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே