சென்னையில் 5 டி.எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
- கோட்டூர் சரக டிஎஸ்பி சுதர்சன், பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்;
- பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையர் செம்பேடு பாபு, கோட்டூர் புரம் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்;
- அதேபோல எண்ணூர் சரக டிஎஸ்பி உக்கிர பாண்டியன், தாம்பரம் உதவி ஆணையராகவும்,
- திருவள்ளூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பி பிரகாஷ்குமார்,
- புளியந்தோப்பு உதவி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.