நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று உறுதியானது.
ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 4 ஆயிரத்து 329 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முப்பத்துமூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்று பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர்.
இதுவரை 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 149 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.