ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறவுள்ளது எனவும் வடமேற்கு திசையில் 6 கி.மீ வேகத்தில் நகர்கிறது எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் காலில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்த புயலுக்கு ஆம்பன் என்று தாய்லாந்து பெயர் சூட்டியது. அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியது.

தற்போது இந்த ஆம்பன் புயல் மிகவும் தீவிரமாக மாறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆம்பன் புயல் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்பன் புயல், வருகிற 20ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்பன் புயல் உருவாகி உள்ளதால் நாகை, காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே