உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்பட உலக நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இரண்டாவது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாக சாலைகளில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

டெல்லியில் மருத்துவ பணியாளர்கள், ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி என சாலையில் போர்டு வைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் நாளை காட்டிலும் 2- வது நாள் ஊரடங்கில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து கண்டப்படுகிறது.

தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் என காவல்துறை எச்சரித்ததால் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே