CSK கேப்டன் தோனிக்கு கொரோனா இல்லை!

வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென பி.சி.சி.ஐ உத்தரவிட்டிருந்தது.

அதனையடுத்து எட்டு ஐ.பி.எல் அணிகளும் தங்கள் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான பணிகளை மேற்கொண்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்று ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அவரது பரிசோதனை முடிவை பொறுத்தே தோனி சென்னைக்கு புறப்படுவார் எனவும் சொல்லப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின.

அதில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தோனி விரைவில் சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே