மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

டாக்டர்கள் அறிவுரைப்படி, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கல்வித்துறை அமைச்சக பணிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடர்ந்து நடைபெறுகிறது இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே