கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு..!!

சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. 

மேலும், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், திறந்த சந்தைகளிலும் விற்க அனுமதி அளித்தது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, மாநில அரசுகளுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனையில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

இவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பூசி விலையை விட மலிவானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே