சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் மறு அறிவிப்பு வரும் வரை கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னையில், ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், தியாகராய நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாகவும், கடைகளில் கிருமி நாசினி தெளிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில் ரங்கநாதன் தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகளை பிற்பகல் 2 மணியுடன் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

மறு அறிவிப்பு வரும் வரை கடைகளை திறக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பாண்டிபஜார், உஸ்மான் சாலைகளில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே