ராஜபாளையம் அருகே கொரோனா தொற்றால் காவலர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே கலங்கபேரியைச் சேர்ந்த வைரவன் என்பவரது மகன் அய்யனார் (40).

இவர் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த(ஜூலை) 2ம் தேதி மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இவர் இரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பின்னர் பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

இவர் பணிபுரிந்த சேத்தூர் ஊரக காவல் நிலையம் மூடப்பட்டது.

அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே