தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,629 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 752.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு: 1,683
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 20
குணமடைந்தோர் எண்ணிக்கை: 752