இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 62,839 ஆக உயர்வு…

இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24மணிநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 128 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கரோனாவில் 62 ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 19 ஆயிரத்து 358 பேர் குணமடைந்துள்ளனர். 

41 ஆயிரத்து 472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவில் உயிரிழப்பு 2ஆயிரத்தைக் கடந்து 2 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 48 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 23 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று 15 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.டெல்லியில் நேற்று 5பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது

உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 74 ஆகவும், , ஆந்திராவில் 44 ஆகவும் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் 30 ஆக உயிரிழப்பு தொடர்கிறது. பஞ்சாப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 9 பேரும், கேரளாவில் 4 பேரும், பிஹாரில் 5 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்

இமாச்சலப் பிரதேசம், ஒடிசாவில் தலா 2 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,228 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,800 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 6,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,020 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 7,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 3,708 பேரும், தமிழகத்தில் 6,535 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,824 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 3,614 பேரும், தெலங்கானாவில் 1,163 பேரும், கேரளாவில் 505 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 485 பேர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 3,373 பேர், ஆந்திராவில் 1,930 பேர், கர்நாடகாவில் 794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 836 பேர், மேற்கு வங்கத்தில் 1,786 பேர், பஞ்சாப்பில் 1,762 பேர், ஹரியாணாவில் 675 பேர், பிஹாரில் 591 பேர், அசாமில் 63 பேர், உத்தரகாண்டில் 67 பேர், ஒடிசாவில் 294 பேர், சண்டிகரில் 169 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 42 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 156 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 50 பேர், திரிபுராவில் 134 பேர், புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.

மேகாலயாவில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே