இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,547-ஆக அதிகரித்துள்ளது.

டில்லியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தங்களது மாநிலங்களுக்கு திரும்பியவா்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவே, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே