தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஸ்பெயினிலிருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க கொத்துக்கொத்தாக மக்களை பலியாக்கி வருகிறது.

மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

இத்தாலி நாடு இந்த வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி வருகின்றன.

இந்தியாவில் 332 பேருக்கும் தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து இருந்து வந்த இருவருக்கும், நியூசிலாந்தில் இருந்து மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா உறுதியான பயணி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே