கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க முழு கவச உடை – தேர்தல் ஆணையம் முடிவு..!!

கொரோனா தொற்று ஏற்பட்டவர் பாதுகாப்பாக வாக்களிக்க ஏதுவாக முழு கவச உடைகளும் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களின் பயன்பாட்டிற்கு தேவையான முக கவசம், கையுறை, கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர் கருவிகள் போன்றவை தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முழு கவச உடைகளும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே