நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,767 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது.
அதே கால அளவில் 147 பேர் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,867-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 73,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். 54,440 பேர் குணமடைந்துள்ளனா்.
கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
அந்த மாநிலத்தில் இதுவரை 47,190 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 15,512 பேர், குஜராத்தில் 13,664, தேசிய தலைநகர் தில்லியில் 12,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.