தெற்கு ரயில்வேயில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி தொடங்கியது. மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்: சுகாதார பணியாளர்கள் 1,387 பேருக்கும், முன்களபணியாளர்கள் 3,820 பேருக்கும், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் 1,484 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு பிரிவில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதையடுத்து இதுவரை 7,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2ம் கட்ட தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது.
- கர்ணனுக்காகக் காத்திருக்கிறேன்: பி.சி. ஸ்ரீராம் பதிவு
- யுவராஜ் சிங் இன்னமும் கூட பவர் ஹிட்டிங்கில் தாதாவாக திகழ்கிறார்: லெஜண்ட் ஆட்ட நாயகன் யூசுப் பதான் நெகிழ்ச்சி