இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
ஒரே நாளில் 18,711 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. 1.84 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,57,756 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.95 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.41 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.65 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.