கொரோனா முடிவுக்கு வர 2 ஆண்டுகள் ஆகும்! – உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில், இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பரவிய போது, இரண்டு வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

இப்பொது பிரச்னை என்னவென்றால், அதிக தொழில்நுட்பம் வைரஸ் அதிக அளவில் பரவ வழிவகுக்கிறது. அதே நேரம், அந்த தொழில்நுட்பம், கொரோனா பரவலை தடுக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே