‘கோப்ரா’ பட நடிகருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி உள்பட பலரது நடிப்பில் ’கோப்ரா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த போட்டியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இர்பான் பதானுக்கும் தற்போது கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே