தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 739 பேருக்கும், செங்கல்பட்டில் 205 பேருக்கும், கோவையில் 173 பேருக்கும், தஞ்சாவூரில் 111 மற்றும் திருவள்ளூரில் 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,75,190 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,650 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து 1131 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 8,51,222 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.