கொரோனா நிவாரண நிதி – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!!

கொரோனா நிவாரணத் தொகையில், முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என திமுக, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

ஜுன் மூன்றாம் தேதி முதல் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முழு முடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்றே தொடங்கி வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு டோக்கன் மூலம் 200 அட்டைத்தாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே